Responsive Ads Here

Pettition of Right

உரிமை விண்ணப்பம்
நாட்டின் சட்டங்கள் மீறப்படுகின்றன என்று அரசனின் எதேச்சதிகார போக்கை சுட்டிக்காட்டிய பாராளுமன்றம் அரசனின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுக்கும் வகையில் ஒரு விண்ணப்பத்தை உருவாக்கிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி னார் . இதற்கு வேறு வழி இல்லாமல் வழக்கமாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது போல் ஒப்புதல் அளித்தால் இது ஒரு சட்டத்தின் அந்தஸ்தைப் பெற்றது.விண்ணப்பத்தின் மூலம் அரசனின் அதிகாரத்தின் மீது சட்டத்தின் மூலமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அரசனின் அதிகாரத்தின் எல்லை சட்டத்தின் ஆட்சியின் தொடக்கம் இதன்மூலம் வரையறை செய்யப்பட்டது.இழமை மன்னனிடம் இருந்து பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட்ட வரலாற்றில் இதில் முதல் கட்டமாகும். அரசியல் துரோகம் மரண தண்டனை சட்டம் 1641 அரசின் சிறப்பு நீதிமன்றங்கள் நாட்டின் பொதுச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல என்று உறுதி செய்தது. சட்டத்தின் ஆட்சி இதன்மூலம் நிலைநாட்டப்பட்டது. இதை ஆங்கில மக்கள் பெற்றனர் அரசனை விட நாட்டின் சட்டம் உயர்ந்தது என்று கருத்து நிலைநாட்டப்பட்டது. வரம்பு கடந்த முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1679 இங்கிலாந்து ஏற்றப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் சட்டம் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிபதிகள் முன் ஒப்படைத்து அவர் சிறையில் அடைக்கப்படும் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும், ஒருமுறை விடுவிக்கப்பட்ட நபரை அதே குற்றத்திற்காக மீண்டும் சிறை பிடிக்க கூடாது என்றும் இத்தகு கீழ்ப் பணிந்து பதில் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு உள்ளாவார்கள் என இச்சட்டம் கூறியது இது தனிநபர் உரிமை பாதுகாப்பு வழங்குவதற்காக அமைந்தது.

No comments:

Post a Comment